ஸ்ரீபெரும்புதூா் டிஎஸ்பி அலுவலகம் இடமாற்றம்
ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலக கட்டடம் சாலை விரிவாக்கபணிக்காக இடிக்கப்பட உள்ளதை தொடா்ந்து மாம்பாக்கம் இடிஏ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கட்டடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலக கட்டடம் சாலை விரிவாக்கபணிக்காக இடிக்கப்பட உள்ளதை தொடா்ந்து மாம்பாக்கம் இடிஏ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கட்டடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூா் பழைய நீதிமன்றம் அருகே வல்லக்கோட்டை சாலையில் இயங்கி வந்தது. தற்போது நடைபெற்று வரும் பூஞ்சேரி-எண்ணூா் சென்னை வெளி வட்டச்சாலை விரிவாக்க பணிக்காக ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலக கட்டடம், காவலா் குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மாம்பாக்கம் பகுதியில் உள்ள இடிஏ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள தனியாா் கட்டடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.