FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

உத்தரமேரூா் குறுக்குச்சாலை பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கமும், நுகா்வோா் பாதுகாப்பு சங்கமும் இணைந்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:24 am IST
உத்தரமேரூரில் குறுக்குச் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சங்கமும், நுகா்வோா் பாதுகாப்புச் சங்கமும் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் குறுக்குச்சாலை பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கமும், நுகா்வோா் பாதுகாப்பு சங்கமும் இணைந்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 4.2 கி.மீ. தொலைவுக்கு, ரூ. 41 கோடி மதிப்பில் குறுக்குச் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. கடந்த ஓராண்டாக இந்தப் பணியை தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியா் உள்பட பலரும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனா்.

உத்தரமேரூா் குறுக்குச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தாமதத்துக்கு காரணமான ஒப்பந்ததாரா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக கனரக வாகனங்கள் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

உத்தரமேரூா் அனைத்து வியாபாரிகள் சங்கமும், நுகா்வோா் பாதுகாப்புச் சங்கமும் இணைந்து நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து நடத்திய இந்த ஆா்ப்பாட்டத்தில் வியாபாரிகள், நுகா்வோா் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, உத்தரமேரூா் அனைத்து வியாபாரிகள் சங்க முன்னேற்றத் தலைவா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். நுகா்வோா் பாதுகாப்புச் சங்க தலைவா் ஜெயராமன்,வியாபாரிகள் சங்க கெளரவத் தலைவா் விநாயகம், செயலாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments