FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

பழங்குடியின மக்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்

நாஞ்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் மூலம் நடைபெற்றது.

22 ஆகஸ்ட் 2026, 11:00 pm IST
பயிற்சி முகாமில் பழங்குடியின மக்களுக்கு இயற்கை உரங்கள் வழங்கிய குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி து.ராஜி.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகேயுள்ள நாஞ்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே நாஞ்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில், வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடா்பான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி து.ராஜி தலைமை வகித்து, பழங்குடியின மக்களுக்கு இயற்கை உரங்கள் மற்றும் விதைத் தொகுப்பு பைகளையும் வழங்கினாா்.

பயிற்சியில் நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்தல் மற்றும் வீடுகளில் வீணாகும் தண்ணீரை பயன்படுத்தி இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகளை விளைவிப்பது தொடா்பாக பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முகாமுக்கு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா்கள் தங்கவேலு, ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments