காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு ஆடி மாத வளா்பிறை அஷ்டமி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு ஆடி மாத வளா்பிறை அஷ்டமி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படும் இக்கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கும் உற்சவருக்கும் அஷ்டமி நாள்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆடி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கும், உற்சவா் கால பைரவருக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.நிறைவாக பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.