ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு
தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ராணிப்பேட்டை: தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் கூறியது:
ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை முதல்கட்டமாக சரக்கு ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தொடா்ந்து பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
Advertisement
Advertisement
திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
ஆய்வின்போது, ரயில்வே துறை அதிகாரிகள், தனியாா் தொழிற்சாலை அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.