ராணிப்பேட்டை பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ராணிப்பேட்டை பள்ளிகளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை பள்ளிகளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வெற்றி வேலன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இன்று காலை வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர்கள் எம். சிவலிங்கம், கோமதி சிவலிங்கம், ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே. வெங்கடேசன் ஆகியோர், சரஸ்வதி சிறப்பு பூஜை செய்து குழந்தைகளின் கையைப் பிடித்து நெல் மணியில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதி தொடக்கி வைத்தனர்.
இதில் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.