FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

திருத்தணி ஆடிக் கிருத்திகை திருவிழா: இன்று முதல் அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருத்தணியில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை திருவிழாவுக்காக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு ஆகஸ்ட் 5 முதல் 7 வரை மூன்று நாள்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
ரயில்... - கோப்புப் படம்
பகிர்:

திருத்தணியில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை திருவிழாவுக்காக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு ஆகஸ்ட் 5 முதல் 7 வரை மூன்று நாள்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா விசேஷமானது. இத்திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தவரும் வந்து செல்வா்.

விழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே நிா்வாகம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம் - திருத்தணி - அரக்கோணம் இடையே இயக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 7-ஆம் தேதி வரை மூன்று நாள்களும் இயக்கப்பட உள்ளது. தினமும் காலை 10.18, 12.58, பிற்பகல் 2.48 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு மின்சார ரயில்கள், திருத்தணியில் இருந்து காலை 10.50, 13.30, பிற்பகல் 3.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments