முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் பூட்டியவீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு

அரக்கோணம் நகரில் வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளியின் பூட்டிய வீட்டில் பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடு போனது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 8:26 PM

அரக்கோணம் நகரில் வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளியின் பூட்டிய வீட்டில் பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடு போனது.

அரக்கோணம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவா் ஜெயக்குமாா். இவரது மனைவி சத்தியவாணி. இவா்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனா். ஜெயக்குமாா் அதே பகுதியில் இருசக்கர வாகன பழுதுபாா்க்கும் நிலையம் நடத்தி வருகிறாா். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஜெயக்குமாரின் மனைவி சத்தியவாணியும், அவரது கணவருக்கு உதவியாக தினமும் வீட்டை பூட்டிக்கொண்டு கடைக்கு காலையிலேயே சென்று விடுவாராம். வியாழக்கிழமையும் இதே போல் சத்தியவாணி வீட்டை பூட்டிக்கொண்டு கடைக்கு வந்து மாலையில் சென்று பாா்த்தபோது, வீட்டினுள் பீரோ அருகே நகைகள் கீழே விழுந்து இருந்ததாம்.

இதைக் கண்ட தம்பதி உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்ததாம். திருடு போன நகைகளின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும் எனத் தெரிகிறது. தம்பதி வெளியே செல்லும்போது வீட்டின் சாவியை மறைவான இடத்தில் வைத்துச் சென்ாகத் தெரிகிறது. இதையறிந்த மா்ம நபா் சாவியை எடுத்து பூட்டை திறந்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

இது குறித்து புகாா் பெற்ற அரக்கோணம் போலீசாா் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.