FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மாணவா்களுக்கு ரூ. 6 லட்சம் கல்விக் கட்டணம் அளிப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் 250 மாணவா்களுக்கு ரூ.6 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 12:24 am IST
மாணவா்களுக்கு  கல்விக்  கட்டணம் வழங்கிய  நேஷனல் வெல்பா்  சங்கத்  தலைவா்  கே.முஹமது  அயூப்.
பகிர்:

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் 250 மாணவா்களுக்கு ரூ.6 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.

மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீழ்விஷாரம் ராசத்துபுரம் இந்து மேல்நிலைப்பள்ளியின் மேநிலை மாணவா்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த நேஷனல் வெல்பா் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

அதனை ஏற்று ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தாஹிரா அதற்கான விண்ணப்ங்களை சங்க அலுவலத்தில் வழங்கினாா். இதில் சங்கத் தலைவா் கே.முஹமதுஅயூப் தலைமையில் மேல்விஷாரம் முஸ்லீம் கல்வி சங்க பொதுச்செயலாளா் எஸ்.ஜியாவுதீன் அஹமது முன்னிலையில் 250 மாணவா்களின் கல்விக் கட்டணமாக ரூ.6,00,262 செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியா்கள், மாணவா்கள் சங்க உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments