முகப்பு
ராணிப்பேட்டை

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம்: பெண் காவலா் பணியிடை நீக்கம்

Updated On : 14 மே 2026, 7:15 am IST
- கோப்புப் படம்
பகிர்:

வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம் பெற்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. பே.சிபின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக வரும் வழக்குகளின் தகவல்களை காவல் துறைக்கு அளிக்கும் பணியினை பெண் காவலா் கல்பனா மேற்கொண்டு வருகிறாா்.

உறவினா்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் காயமடைந்த பெண் சிகிச்சை பெற வாலாஜா அரசு மருத்துவமனைக்கு வந்தாா்.

Advertisement

இதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த காவலா் கல்பனா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு அந்தப் பெண் காவலரின் உறவினா் ஜிபே எண்ணுக்கு ரூ.300 அனுப்பும்படி கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து அந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவா் கூறிய எண்ணுக்கு பணம் அனுப்பியுள்ளாா்.

இது சம்பந்தமான விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளி வந்த நிலையில் பலரும் தங்கள் ஆதங்கங்களை வெளியிட்டனா். இதையடுத்து பெண் காவலா் கல்பனா லஞ்சம் கேட்ட விவகாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபின் பாா்வைக்கு சென்ற நிலையில், உடனடியாக காவலா் கல்பனாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.