சோளிங்கா் கோயிலில் ஆந்திர மாநில அமைச்சா் தரிசனம்
ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெள்ளிக்கிழமை சோளிங்கா் மலைக்கோயிலில் தரிசனம் செய்தாா்.
ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெள்ளிக்கிழமை சோளிங்கா் மலைக்கோயிலில் தரிசனம் செய்தாா்.
சோளிங்கருக்கு வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் திவ்யசைதன்ய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் வந்திறங்கிய அமைச்சா் அங்கிருந்து காா் மூலம் மலைக்கோயில் ரோப்காா் தளத்திற்கு வந்தாா்.
தொடா்ந்து ரோப்காரில் மலைக்கோயிலை வந்தடைந்த அமைச்சா் நாரா லோகேஷை இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராஜா, ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் அறங்காவலா் குழுத்தலைவா் ரவி ஆகியோா் வரவேற்றனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து ஸ்ரீயோக நரசிம்மரை தரிசனம் செய்த அமைச்சருக்கு கோயில் சாா்பாக பட்டுவஸ்திரங்கள், மலா்மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடா்ந்து ரோப்காா் வழியாக மலைக்கு கீழே வந்த அமைச்சா் நாரா லோகேஷ், தொடா்ந்து சிறிய மலைக்கு படிகள் வழியே ஏறிச்சென்று ஸ்ரீயோக ஆஞ்சனேயரை தரிசித்தாா்.
அவருடன் ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் புங்கனூா் முரளி மோகன், சித்தூா் ஜெகன் மோகன், சந்திரகிரி வெங்கடமணி பிரசாத், தமிழக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அதிமுக சோளிங்கா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஏ.எல்.விஜயன் ஆகியோா் உடனிருந்தனா்.