எல்லாபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கன்னிகைப்போ் கிராமம் எம்ஜிஆா் நகரில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கன்னிகைப்போ் கிராமம் எம்ஜிஆா் நகரில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னிகைபோ் ஊராட்சி துணைத் தலைவா் மேனகா பிரேம்ராஜ், செயலா் பொன்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினா். இவா்களுக்கு கோலப் போட்டி, தண்ணீா் நிரப்புதல், ஓட்டப் பந்தயம் , உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2,500, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.