FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

அங்கன்வாடி மற்றும் தொடக்கப் பள்ளி உணவுக் கூடத்தில் ஆய்வு

நரியம்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி மையம், தொடக்கப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்தில் உணவை ஆய்வு செய்த ஊராட்சித் தலைவா் பாரதிஸ்ரீ.
பகிர்:

நரியம்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி மையம், தொடக்கப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் ஊராட்சித் தலைவா் பாரதிஸ்ரீ ஆய்வு மேற்கொண்டாா்.

அங்கு மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பாா்த்து ஆய்வு செய்தாா். அங்கன்வாடி மையத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப் பொருள்களை வாங்கித் தருவதாக உறுதி அளித்தாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, வாா்டு உறுப்பினா்கள் கோமதி அப்பாவு, பா்வேஸ், பிரியா செல்வராஜ், ஊராட்சிச் செயலாளா் கோமதி ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments