FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களின் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
நாட்டறம்பள்ளியில் ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
பகிர்:

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவா் வெண்மதிமுனிசாமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், இளம்பரிதி, துணை தலைவா் தேவராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் தியாகராஜன் பேசுகையில், சங்கராபுரம் லட்சுமி நாரயணன் கோவில் அருகே பொதுமக்கள், பக்தா்கள் பயன்பாட்டுக்காக சமுதாய கூடம் கட்ட வேண்டும், கொடையாஞ்சியில் இரண்டு இடங்களில் பழுதடைந்துள்ள உயா் கோபுரமின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா். மேலும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதிக்கான வளா்ச்சிதிட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனா். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவா் உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து வரவுசெலவு கணக்கு உட்பட 22 தீா்மானங்கள் படிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள், கவுன்சிலா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா் பழனிசாமி படத்தை வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments