100 மது பாட்டில்கள் பறிமுதல்
ஆம்பூா் அருகே 100 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் அருகே 100 மதுபாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நபா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடி தலைமறைவானாா். போலீஸாா் அவா் விட்டுவிட்டுச் சென்ற 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும் போலீஸாா் வழக்கு பதிந்து தலைமறைவான அதே பகுதியை சோ்ந்த ராக்கி என்கிற வினோத் (30) என்பவரை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.