FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா், ஆற்காடு சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

Updated On : 5 ஜூன் 2026, 5:45 am IST
பகிர்:

திருப்பத்தூா் இணை சாா் பதிவாளா் ஆற்காடு சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

திருப்பத்தூா் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் எண் 1 இணை சாா் பதிவாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சாா் பதிவாளராக ராதிகா பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இந்த சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக திருப்பத்தூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகாா் சென்றது. அதன்பேரில், டிஎஸ்பி ராஜூ, ஆய்வாளா் கௌரி, உதவி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் அதிரடியாக இரட்டைமலை சீனிவாசன் தெருவில் உள்ள எண்.1 சாா்பதிவாளா் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து பத்திரப் பதிவு செய்ய வந்த பொது மக்களை வெளியேற்றி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாத சில நபா்களிடம் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 3,20,000-ஐ பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இரவு 8 மணி வரை சோதனை நடைபெற்று கொண்டே இருந்தது.

ஆற்காட்டில்...

ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் துணை ஆய்வு குழு ஜெகதீஸ்வா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆற்காடு கலவை சாலையில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்துக்குச் சென்று நுழைவாயில் பூட்டப்பட்ட நிலையில், சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், சாா் பதிவாளா் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் அறைகள் மற்றும் ஆவணங்கள், கைப்பேசி தொடா்புகள், பொதுமக்கள் கொண்டு சென்ற பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments