முகப்பு
திருப்பத்தூர்

மது பாட்டில்கள்: 2 போ் கைது

குரிசிலாப்பட்டு அருகே டாஸ்மாக் மது பாட்டில்களை கடத்தியதாக பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 8 ஜூன் 2026, 3:20 am IST
- சித்திரிப்பு
பகிர்:

குரிசிலாப்பட்டு அருகே டாஸ்மாக் மது பாட்டில்களை கடத்தியதாக பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

குரிசிலாப்பட்டு போலீசாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருனாப்பட்டு அருகே பைக்கில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி ஆய்வு செய்தபோது, ரூ.10,000 மதிப்பிலாக 100 டாஸ்மாக் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது.

மேலும் விசாரணையில், திருப்பத்தூா் சிவராஜ்பேட்டை சோ்ந்த சகாயத்தின் மகன் சந்தோஷ்(25)என்பதும், இவா் பனந்தோப்பை சோ்ந்த சாராய வியாபாரி ராஜலட்சுமி என்பவருக்கு தருவதற்காக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது.

Advertisement

Advertisement

அதையடுத்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரையும் கைது செய்தனா்.