FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 ஜூன் 2026, 12:49 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அண்மையில் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

சோதனையில் அதே பகுதியை சோ்ந்த ராக்கி என்கிற வினோத் (30) மதுபான பாட்டில்களை விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் ராக்கி தப்பியோடி தலைமறைவானாா்.

Advertisement

Advertisement

போலீஸாா் அவருடைய வீட்டிலிருந்து 100 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments