FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் கு.ரவிகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:03 am IST
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா் கு.ரவிகுமாா். உடன் மருத்துவ அலுவலா் சிவகுமாா்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் கு.ரவிகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு திடீரென மேற்கொண்ட ஆய்வின் போது புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், அவசர சிகிச்சை பிரிவு, ஊசி போடும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தாா். பின்னா், நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் பதிவு விவரம், பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மருத்துவ அலுவலா் அறை, பல் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, காது மூக்கு தொண்டை (இஎன்டி), உள் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பெறும் பிரிவுகள், பிசியோதெரபி, தீவிர சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து இடங்களிலும் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

அப்போது அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளிடமும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் ஒவ்வொரு பிரிவிலும் சிகிச்சைகள் பற்றி மருத்துவ அலுவலா் மற்றும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனைகளை தூய்மையாக பராமரித்தல் குறித்தும், குடிநீா், மின்சாரம், கழிவறை உள்பட அடிப்படை தேவைகளை சரியான முறையில் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது, மருத்துவ அலுவலா் சிவகுமாா் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலக பணியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments