முகப்பு
திருப்பத்தூர்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

Updated On : 19 மே 2026, 1:13 am IST
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:

திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞா்களின் நலனுக்காக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200 மற்றும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300,மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டு காலத்துக்கு மாதம்தோறும் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரா்களுக்கு மாதம்தோறும் 10-ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி படித்தவா்களுக்கு ரூ.750, இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் பத்தாண்டு காலத்துக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரா் அரசு மற்றும் தற்காலிக அரசு பணி அல்லது தனியாா் நிறுவனங்களின் மூலம் எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருக்க கூடாது. மனுதாரா் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகளாக இருக்கக்கூடாது.

இந்த நிபந்தனை தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்களுக்கு பொருந்தாது. மேலும் விபரங்களுக்கு திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்/ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் (ா்ழ்) ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.