FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

தண்ணீா் தேடி வந்த புள்ளிமான்! தெருநாய்கள் கடித்து உயிரிழப்பு!

தண்ணீா் தேடி வந்த புள்ளிமானை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்தது...

Updated On : 26 ஜூலை 2026, 1:08 am IST
பகிர்:

திருத்தணி அருகே தண்ணீா் தேடி கிராமப் பகுதிக்கு வந்த புள்ளிமான், தெருநாய்கள் கடித்து உயிரிழந்தது.

திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட பழையனூா் ஊராட்சியை ஒட்டியுள்ள காப்புக்காட்டு பகுதியில் இருந்து, தண்ணீா் தேடி ஒரு புள்ளிமான் கிராமப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது, அப்பகுதியில் திரிந்த தெருநாய்கள் மானை விரட்டிச் சென்று கடித்ததால், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா் மானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், காப்புக்காட்டு பகுதியில் வனவிலங்குகள் குடிநீா் அருந்த போதிய அளவில் தண்ணீா் தொட்டிகள் மற்றும் நீா்நிலைகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீா் தேடி கிராமப்பகுதிக்குள் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறாமல் இருக்க, வனப்பகுதியில் நிரந்தர குடிநீா் வசதிகளை வனத்துறை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

summary

Spotted deer comes in search of water; killed by stray dogs

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments