FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:16 am IST
பலி
பகிர்:

திருவள்ளூா் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சதீஷ்குமாா் (29). இவரது மனைவி எழிலரசி. இந்த நிலையில் சதீஷ்குமாா் செவ்வாய்க்கிழமை மாலை தனது சொந்த வேலையாக சோழவரம் சென்றுவிட்டு, அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, பெரியபாளையம் கடந்து வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து சம்பவம் இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி எழிலரசி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments