கவிஞருக்கு சிறந்த நூலுக்கான பரிசு
வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்கு சிறந்த பெண்ணிய நூலுக்கான பரிசு வழங்கப்பட்டது.
வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்கு சிறந்த பெண்ணிய நூலுக்கான பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவுநாள் விழா அண்மையில் நடைபெற்றது. இதில், வந்தவாசி கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய "எங்கிருந்து தொடங்குவது' என்ற நூல் சிறந்த பெண்ணிய நூலாக தேர்வு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரிசு மற்றும் சான்றிதழை அ.வெண்ணிலாவிடம் வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.