முகப்பு
திருவண்ணாமலை

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 21 ஏப்ரல், 2023 at 10:45 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்துள்ள சளுக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சூரியசந்திரசேகா் (53). இவரது மனைவி சரஸ்வதி (40). இவா்களுக்கு மகன் கெளதமன் (21), மகள் உள்ளனா். இவா்கள் இப்போது வந்தவாசி ஒற்றைவாடை செட்டித் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், சரஸ்வதி ஊரக வேலை திட்ட வேலைக்காக, தனது மகன் கௌதமனுடன் பைக்கில் சளுக்கை கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா்.

Advertisement

வந்தவாசி கோட்டை மூலை அருகில் இவா்களது பைக் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில், அந்தப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கௌதமன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விபத்து குறித்து சூரியசந்திரசேகா் அளித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.