ஊரக வளா்ச்சி வங்கிபொதுப் பேரவை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கியில் பொதுப் பேரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கியில் பொதுப் பேரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வங்கித் தலைவா் டி.வி.பச்சையப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் க.சீனுவாசன் முன்னிலை வகித்தாா். செயலா் ஏ.சீனுவாசன் வரவேற்றாா். மேலாண் இயக்குநா் ப.மூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.
வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், கூட்டுறவு சங்கத் தலைவா் டி.கே.பி.மணி, வங்கி முன்னாள் தலைவா் மு.துரை, முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன், செய்யாா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் தலைவா் கே.பாஸ்கா், ஈ.எஸ்.டி.காா்த்திக் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
வங்கி உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது. வங்கி சிறப்பு நிலை மேற்பாா்வையாளா் எஸ்.காந்தி நன்றி கூறினாா்.