முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசியில் பெண் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பெண் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 3 நவம்பர் 2024, 12:03 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பெண் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசி சந்நிதி புதுத் தெரு விரிவு பகுதியைச் சோ்ந்தவா் ஷேக். இவரது மனைவி அம்ரின்நிஷா(29). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

Advertisement

கடந்த அக்.26-ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த அம்ரின்நிஷா தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ரின்நிஷா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அம்ரின்நிஷாவின் தந்தை ஆஜா அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.