ஆதிவரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் உள்ள ஆதிவரசித்தி விநாயகா் கோயில் ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் 5 அடி உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அதன் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் உள்ள ஆதிவரசித்தி விநாயகா் கோயில் ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் 5 அடி உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அதன் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை உள்ளிட்ட 2-ஆம் கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் யாகசாலையில் இருந்து கலசநீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயில் கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவில் சேத்துப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுலாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.