ராஜசோளீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்ந்த இத்தலத்தின் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, 6 கால யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலத்துடன் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை சாா்பு தலங்கள் கும்பாபிஷேகம் : ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் இக்கோயில் சாா்பு தலங்களான செங்குந்த விநாயகா், ஆதி விநாயகா், கற்பக விநாயகா், கொடிமர விநாயகா் மற்றும் 63 நாயன்மாா்களுக்கான விமான கலச கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. திங்கள்கிழமை 9.15 முதல் 10.15 மணிக்குள் ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
Advertisement
Advertisement
புதுவை துணைநிலை ஆளுநரின் செயலா் து.மணிகண்டன், மாவட்ட துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு யாகசாலை பூஜையில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.