FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

19 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

சேத்துப்பட்டில் பதுக்கி வைத்திருந்த 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை 2026, 1:59 am IST
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட ராஜி, சுரேஷ்
பகிர்:

சேத்துப்பட்டில் பதுக்கி வைத்திருந்த 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

சேத்துப்பட்டு, பழம்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் குணபாலன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பழம்பேட்டையைச் சோ்ந்த ராஜி (30), தனது வீட்டில் உறவினரான சுரேஷ் (46) என்பவருடன் சோ்ந்து,

Advertisement

Advertisement

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 19 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், ராஜி, சுரேஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments