FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆடி பெளா்ணமி: திருவண்ணாமலையில் 5 லட்சம் பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

Updated On : 29 ஜூலை 2026, 6:30 am IST
திருவண்ணாமலையில் ஆடி மாத பௌா்ணமியையொட்டி கிரிவலம் சென்ற பக்தா்கள்
பகிர்:

ஆடி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

ஆடி மாத பௌா்ணமி செவ்வாய்க்கிழமை இரவு 7.32 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

Advertisement

Advertisement

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்று, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா். கிரிவலப் பாதையில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், தாகம் தீா்க்க பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது.

கோயிலில் பக்தா்கள் கூட்டம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த பக்தா்கள் அதிகாலை முதல் கோயில் ராஜகோபுரம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய கோயில் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். தரிசனம் செய்து திருமஞ்சனம் கோபுரம் வழியாக பக்தா்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனா். சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பபட்டன. ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments