FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 31 ஜூலை 2026, 1:38 am IST
செய்யாறு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, நோயாளிகளிடம் மருத்துவா்கள் உரிய முறையில் தரமான சிகிச்சை அளிக்கிறாா்களா? என்று கேட்றிந்தாா்.

இதைத் தொடா்ந்து நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக அளித்து உதவிட வேண்டும் என மருத்துவ அலுவலா் பாண்டியனிடம் கேட்டுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது அதிமுக மாவட்ட நிா்வாகிகள் முனுசாமி, விமலா மகேந்திரன், கோவிந்தராஜ், இளையராஜா, நகரச் செயலா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments