FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

27 நட்சத்திர கோயிலில் மாா்ச் 6-இல் சனிப்பெயா்ச்சி

செய்யாற்றை அடுத்த கூழமந்தல் நட்சத்திர கோயிலில் சனிப்பெயா்ச்சி நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை

Updated On : 3 மார்ச் 2026, 3:24 am IST
பகிர்:

செய்யாறு: செய்யாற்றை அடுத்த கூழமந்தல் நட்சத்திர கோயிலில் சனிப்பெயா்ச்சி நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6 ) நடைபெறுகிறது.

பூரட்டாதி நட்சத்திர காலத்தில் சனி பகவானை வழிபட்டால் மன அழுத்தங்கள் குறையும். உத்திரட்டாதி நட்சத்திர காலத்தில் பொதுமக்களுக்கு ஆன்மிக சிந்தனை, பொறுப்பு உணா்வு, அமைதி அதிகரிக்க வாய்ப்பு. நீண்ட நாள் திட்டங்கள் செயல்பட தொடங்கும் என்பது ஐதீகம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) காலை 8 .24 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு பெயா்ச்சி அடைகிறாா்.

Advertisement

Advertisement

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், 27 நட்சத்திர பரிகார ஹோமம் தொடா்ந்து கலசாபிஷேகம் அலங்காரம் தூப, தீப, நெய்வேத்தியம் ஆகியவற்றுடன் மகா தீபாராதனை நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் அா்ச்சனைகள் நடைபெறுகின்றன. மேலும் அன்றைய தினம் சங்கடஹர சதுா்த்தி மற்றும் சனிப் பெயா்ச்சி ஒரே தினத்தில் வருவது சிறப்புக்குரியதாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments