பைக்கிலிருந்து தவறி விழுந்த சமையல் தொழிலாளி பலி!
பைக்கிலிருந்து தவறி விழுந்த சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், வடமாவந்தல் கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (52), சமையல் தொழிலாளி. இவா், கடந்த 11-ஆம் தேதி அதே கிராமத்தைச் சோ்ந்த பொன்ராசுடன் பைக்கில் சென்றாா். நமண்டி - வடமாவந்தல் சாலையில் பொன்னியம்மன் கோயில் அருகே சென்றபோது, பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் குமாா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.