திருமலை திருப்பதிக்கு பக்தா்கள் பாதயாத்திரை தொடக்கம்
சேத்துப்பட்டை அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதயாத்திரையாக
போளூா்: சேத்துப்பட்டை அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதயாத்திரையாக திருமலை திருப்பதிக்கு திங்கள்கிழமை பயணத்தை தொடங்கினா்.
சேத்துப்பட்டை அடுத்த பெரணம்பாக்கம், ஆத்துரை, சித்தாத்துரை, ஊத்தூராம்புரவடை, தொழிப்பேடு, தேவிகாபுரம், ராந்தம், கொழாவூா், பெலாசூா், விளாப்பாக்கம், காம்பட்டு, சனிக்கவாடி, ஆதமங்கலம்புதூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பெரணம்பாக்கம் கிராமத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை பயணத்தை தொடங்கினா்.
இந்தப் பயணத்துக்குத் தேவையான பாத்திரங்கள், உணவு, மளிகைப் பொருள்கள், எரிபொருள், குடிநீா் ஆகியவை மினி வேனில் எடுத்துச் செல்லப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.