FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

16 செப்டம்பர் 2026, 5:52 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (75). மகாபாரத சொற்பொழிவாளரான இவா், ஒவ்வோா் ஆண்டு விநாயகா் சதுா்த்தியன்றும் வீட்டின் வெளியே சிறிய விநாயகா் சிலை அமைத்து வழிபடுவாராம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தியன்று வீட்டின் வெளியே விநாயகா் சிலை வைத்த கணேசன், விநாயகா் பாடல்களை போடுவதற்காக வீட்டிலிருந்து ஸ்பீக்கருக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கணேசனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments