ஆம்பூர் அருகே மூடிக்கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
ஆம்பூர் அருகே பேர்ணாம்பட்டு ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சியில் பழைய அரங்கல்துருகம், புது அரங்கல்துருகம், காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, காரப்பட்டு, சுட்டக்குண்டா, பொன்னப்பல்லி, அபிகிரிப்பட்டறை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.
இந்த அரங்கல்துருகம் ஊராட்சியில் அபிகிரிப்பட்டறை கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அபிகிரிப்பட்டறை கிராமத்தின் அருகே கடந்த 2011-2012-ஆம் ஆண்டு மகளிர் சுகாதார வளாகம் ரூ. 2.88 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மகளிர் சுகாதார வளாகத்தில் கழிப்பறைகள், குளியலறைகள், துணி துவைக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ளன. இந்த மகளிர் சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த ஊராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் பழுதடைந்து உள்ளன. பொதுமக்கள் குடிநீருக்கு பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியது. தண்ணீர் தேவைகளுக்காக தனியார் பம்புசெட்டுகளுக்கு போக வேண்டியுள்ளது. மேலும், காலைக்கடன் கழிப்பதற்கும், குளிப்பதற்கும் இந்த மகளிர் சுகாதார வளாகத்துக்கு தண்ணீர் வசதி செய்து தந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.