ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு
நாட்டறம்பள்ளியில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாட்டறம்பள்ளியில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன் (40). இவர், வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஸ்ரீதரன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.