யானைகளால் நாசம் செய்யப்பட்ட நெல் பயிர்
குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.
குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.
குடியாத்தத்தை அடுத்த மோர்தானா காப்புக்காடு சரகத்துக்கு உள்பட்ட சைனகுண்டா கிராமம் தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது.புதன்கிழமை இரவு சைனகுண்டா கிராமத்துக்குள் நுழைந்த 4 யானைகள் அங்குள்ள பாபு, ரமேஷ்குமார், சந்திரபாபு ஆகியோரின் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்தன. தகவலின்பேரில் குடியாத்தம் வனத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.