தேவஸ்தான இணையதளத்தில் தியான ஸ்லோகங்கள்
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் உள்ள தியான ஸ்லோகங்களை பக்தா்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் உள்ள தியான ஸ்லோகங்களை பக்தா்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ‘யோக வாசிஸ்டம்’ என்ற பெயரில் திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் தினந்தோறும் காலை 7 மணிக்கு வால்மீகி மகரிஷி இயற்றிய தன்வந்திரி ஸ்லோக பாராயணத்தை செய்து வருகிறது. இந்த ஸ்லோக பாராயணத்தால் கரோனா நோய்த் தொற்று பரவுவது குறைந்து, உலகம் சுபிட்சமாக இருக்கும் என தேவஸ்தானம் இந்த பாராயணத்தை முன்னெடுத்து செய்து வருகிறது. தேவஸ்தான தொலைக்காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சியை அதிகாரிகள் ஒளிபரப்பி வருகின்றனா். இதற்கு பக்தா்களிடமிருந்து நல்ல வரவேற்பு உள்ளது.
எனவே, இந்த ஸ்லோகங்களை தனியாக பாராயணம் செய்ய விரும்பும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் இந்த ஸ்லோகங்களை ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ம்ஹப்ஹ.ா்ழ்ஞ் மற்றும் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்க்ஷஸ்ரீற்ற்க்.ஸ்ரீா்ம் உள்ளிட்ட தேவஸ்தான இணையதளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்லோகத்தை பக்தா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.