கல்லூரியில் மின் விநியோகம் குறித்த சிறப்புரை
கோவை, நவக்கரை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தரமான மின் விநியோகம் குறித்த சிறப்புரை அண்மையில் நடைபெற்றது.
கோவை, நவக்கரை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தரமான மின் விநியோகம் குறித்த சிறப்புரை அண்மையில் நடைபெற்றது.
மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, பாலக்காடு அகல்யா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் ஜி.முருகானந்தம் தலைமை தாங்கினார். அவர், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மின் விநியோகப் பிரச்னைகள் குறித்து விளக்கினார். இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், அறிவியல், மனிதப் பண்புகள் துறை சார்பில் தானியங்கி ரோபோ தயாரிப்பு, இயக்கம் உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில், பாலக்காட்டைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ராகேஷ் கலந்து கொண்டு, இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.