FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அம்மன் கோயிலில் சுவாமியின் தாலி திருட்டு

பொள்ளாச்சி அருகே உச்சி மாகாளியம்மன் கோயிலில் அம்மனின் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:05 am IST
பகிர்:

பொள்ளாச்சி அருகே உச்சி மாகாளியம்மன் கோயிலில் அம்மனின் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தில் உச்சி மாகாளியம்மன் கோயில் உள்ளது. செவ்வாய்க்கிழமை கோயிலில் பூஜையை முடித்துவிட்டு பூசாரி வழக்கம்போல கோயிலை பூட்டிவிட்டுச் சென்றார். 
கோயிலுக்கு அவர் புதன்கிழமை காலை  வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 
கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி, வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தன. 
தவிர உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து, ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments