FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கேரள என்டிசி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவராக கோவையைச் சேர்ந்தவர் தேர்வு

கேரளத்தில் உள்ள என்டிசி பஞ்சாலை ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவராக கோவையைச் சேர்ந்த டி.எஸ்.ராஜாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 7 ஜூன் 2018, 7:47 am IST
பகிர்:

கேரளத்தில் உள்ள என்டிசி பஞ்சாலை ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவராக கோவையைச் சேர்ந்த டி.எஸ்.ராஜாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
தேசிய பஞ்சாலைக் கழக (என்டிசி) பஞ்சாலைகள், கேரள மாநிலத்தில் விஜய மோகினி (திருவனந்தபுரம்), கேரள லட்சுமி, அழகப்பா (திருச்சூர்), கண்ணனூர் மில்ஸ், புதுச்சேரியில் உள்ள மாகி மில்ஸ் என 5 பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் என்டிசி யுனைடெட் ஸ்டாப் பெடரேஷன் கேரளா என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 இந்தக் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் திருச்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், கோவையைச் சேர்ந்த டி.எஸ்.ராஜாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இவர் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள என்டிசி ஆலைகளில் ஜவுளி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments