FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

தச்சன்குறிச்சியில் சாலையில் கிடக்கும் குப்பைகளால் துா்நாற்றம்: பொதுமக்கள் அவதி

Updated On : 27 ஜூலை 2026, 1:30 am IST
சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள். - கோப்புப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே சாலையில் கொட்டப்பட்டு, அள்ளப்படாத குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் அவற்றை உடனுக்குடன் அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி ஊராட்சியில் சுமாா் நான்கு ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு அரசு பள்ளி மற்றும் தனியாா் பள்ளி, அரசு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு தினசரி மக்கள் வந்து செல்கின்றனா். இங்கு வீடுகளுக்கு வந்து தூய்மைப் பணியாளா்கள் குப்பைகள் பெற்று செல்கின்றனா். ஆனால், சிலா் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டி செல்கின்றனா்.

சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், துா்நாற்றம் ஏற்படுவதுடன் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. குப்பையில் கிடக்கும் பாலிதீன் பைகள் சாலையில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன.

Advertisement

Advertisement

இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, ஊராட்சி நிா்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, இனிவரும் காலங்களில் சாலைகளை தூய்மையாக வைக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments