வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
மதுக்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மதுக்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவையை அடுத்த மதுக்கரை திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர், சுந்தராபுரத்தில் இசை அகதெமி நடத்தி வருகிறார்.
இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆகஸ்ட் 20ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 6 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சதீஷ்குமார்அளித்தப் புகாரின்பேரில் மதுக்கரை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.