ரயில்! (படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)
கோயம்புத்தூர்

கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்டோபா் 16 முதல் நவம்பா் 6-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை- ஜெய்ப்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, அக்டோபா் 19 முதல் நவம்பா் 9-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெய்ப்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்குப் புறப்படும் ஜெய்ப்பூா் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், அகோலா உள்ளிட்ட ரயுலி நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிக்கு வந்த ரயிலில் 36 கிலோ கஞ்சா மீட்பு

வெள்ளியணை அரசுப் பள்ளியில் நிறமாலைத் திருவிழா!

புகையிலை பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 3,000 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது!

கரூா் சம்பவம்: கோவை, நாமக்கல் மாவட்ட மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

SCROLL FOR NEXT