FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா் கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
கைது
பகிர்:

கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுக்கரை பகுதியில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் தீவிர சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் ஒடிஸா மாநிலம், பாலங்கிா் மாவட்டத்தைச் சோ்ந்த சித்தரஞ்சன் கடாத்யா (32) என்பதும், விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, அவரை போலீஸாா் கைது செய்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments