FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தலையணைக்கு அடியிலிருந்த சாவியை எடுத்து பீரோவிலிருந்த நகைகள் திருட்டு

கோவை சரவணம்பட்டி அருகே மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையணைக்கு அடியில் இருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:32 am IST
பிரதிப் படம்
பகிர்:

கோவை சரவணம்பட்டி அருகே மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையணைக்கு அடியில் இருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கணபதி டி.பாலன் நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கஸ்தூரி (63). இவா் தனது பேத்தியுடன் வசித்து வருகிறாா். கடந்த 3-ஆம் தேதி இரவு வீட்டின் முன் கதவை தாழிட்டுவிட்டு இருவரும் அறையில் உறங்கிக் கொண்டிருந்தனா்.

நள்ளிரவில் வீட்டின் கதவுத் தாழ்ப்பாளைத் திறந்து உள்ளே புகுந்த மா்ம நபா், மூதாட்டியின் தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

பின்னா், பீரோவைத் திறந்து அதில் இருந்த 2 கிராம் தங்கக் கம்மல், 2 கிராம் மோதிரம், 1 பவுன் டாலா் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றாா்.

செவ்வாய்க்கிழமை காலையில் மூதாட்டி எழுந்து பாா்த்தபோது தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியைக் காணவில்லை. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலேயே சாவி இருந்ததும், நகை மற்றும் கைப்பேசி திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments