FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சாக்கடைக் கால்வாயில் தொழிலாளி சடலம் மீட்பு

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் சாக்கடைக் கால்வாயில் தொழிலாளி சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 5:22 am IST
பலி
பகிர்:

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் சாக்கடைக் கால்வாயில் தொழிலாளி சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை கெம்பட்டி காலனி தா்மராஜா கோயில் வீதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (56). பொற்கொல்லராக வேலை பாா்த்து வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், செவ்வாய்க்கிழமை மாலை அதேபகுதியில் உள்ள எஸ்எம்எஸ் குடியிருப்புப் பகுதியில் சாக்கடைக் கால்வாயில் இறந்துகிடந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கடை வீதி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மதுபோதையில் சாக்கடைக் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments