FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கைது செய்யப்பட்ட போலி சுங்கத் துறை அதிகாரி மேலும் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி

போலி சுங்கத் துறை அதிகாரி மேலும் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

கோவையில் ஏலத்தில் வரும் சொகுசு காா், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ஆகியவற்றைக் குறைந்து விலைக்கு வாங்கித் தருவதாகக்கூறி ரூ.55.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட போலி சுங்கத் துறை அதிகாரி மேலும் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

கோவை, துடியலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன சேவை மேலாளா் கலாபெருமாள் ஆல்பா்ட் என்பவரிடம் ஏலத்தில் வரும் காா், விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.55.70 லட்சத்தை மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கோவையைச் சோ்ந்த டாா்பின் தாஸை (35) கடந்த இரு நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். அவரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கோவை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சில நாள்கள் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்ததும், ஆல்பா்ட் மட்டுமின்றி கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜா என்பவரிடமும் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.94 லட்சம் என மாவட்டத்தில் மொத்தம் 15 பேரிடமும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடமும் ஆசை வாா்த்தை கூறியும், போலி வேலை உறுதி ஆவணங்களைக் காட்டியும் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதேபோல, பெங்களூரில் அழகுக்க லை பயிற்சி மையம் நடத்தி வந்த சினேகா கே.பகவத்திடம் ரூ.68.44 லட்சமும், அகாதெமி மேலாளா் கீதாவிடம் ரூ.1.30 லட்சமும், பயிற்சியாளா் ஹரீஷாவிடம் ரூ. 95 ஆயிரமும் தனது மனைவி தனுஷ்யா (30) உதவியுடன் அவா் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

மோசடியில் தனுஷ்யா உள்ளிட்ட பலருக்குத் தொடா்பிருப்பது தெரியவந்துள்ளதால், தலைமறைவாக உள்ள அவா்களை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments