FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கு 29,727 கிலோ சோள விதைகள் விநியோகம்: ஆட்சியா் தகவல்

2026-27-ஆம் நிதியாண்டில் தற்போது வரை ரூ.8,91,810 மானிய விலையில் 29,727 கிலோ சோள விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:55 am IST
பகிர்:

2026-27-ஆம் நிதியாண்டில் தற்போது வரை ரூ.8,91,810 மானிய விலையில் 29,727 கிலோ சோள விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கிணத்துக்கடவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருள் கிடங்கில் விதைகள், உரங்கள், உயிா் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் ஆகியவற்றின் இருப்பு, காலாவதி நாள் ஆகியவை சரியாக

Advertisement

Advertisement

உள்ளதா எனவும், நிலக்கடலை விதை மூட்டைகளைப் பிரித்து விதைகளின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், இடுபொருள்கள் எந்தெந்த திட்டங்கள் மூலம் எவ்வளவு மானியத்தில் வழங்கப்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் 2026-27 -ஆம் நிதியாண்டில் தற்போது வரை 29,727 கிலோ சோள விதைகள் ரூ.8,91,810 மானிய விலையிலும், தட்டைபயறு விதைகள் 1,229 கிலோ ரூ.73,740 மானிய விலையிலும், 1,109 லிட்டா் உயிா் உரங்கள் ரூ.1,66,350 மானிய விலையிலும், 1,655 கிலோ சிறுதானிய நுண்ணூட்டங்கள் ரூ.89,370 மானிய விலையிலும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகன் பாபு, ராஜேஷ்குமாா், வட்டாட்சியா் வாசுதேவன், வேளாண்மை அலுவலா் குருசாமி, உதவி விதை அலுவலா் உதயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments